Wednesday 30 July 2014

பூச்சி விரட்டிகள் தயாரித்தல் : வேம்பு பொருள்

வேப்ப விதைக்கரைசல்: ஒரு ஏக்கருக்கு 3-5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம்பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம்பருப்பை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை ஒரு காடாத்துணியில் மூடையாக கட்டி சுமார் 10லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இந்தக் கரைசலை வடிகட்டினால் 6-7 லிட்டர் கரைசல் கிடைக்கும்.

பயிருக்குத் தெளிக்க வேண்டும்பொழுது ஒரு டேங்கிற்கு (10 லிட்டர்) 500-100 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500-1000 மி.லி, கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக்கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டர்-10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக்கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது.

ஒரு ஏக்கர் பயிருக்கு 6 டேங்க் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானை பயன்படுத்தினால் 11 டேங்க் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.


வேப்ப இலைக்கரைசல்: ஒரு ஏக்கர் பயிருக்குத் தெளிக்க 10-12 கிலோ இலை தேவைப்படும். இந்த இலையை ஒன்றுமிரண்டுமாக இடித்து ஒரு காடாத்துணியில் மூடையாக கட்ட வேண்டும். இதை 20-24 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

அதற்குப்பிறகு இந்தக்கரைசலை வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும்பொழுது 15-17 லிட்டர் கரைசல் கிடைக்கும்.ஒரு டேங்கிற்கு (10 லிட்டர் அளவு) 500-1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500-1000 மி.லி, கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு டேங்க் கரைசலுடன் 100 மி.லி. காதி சோப்புக்கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டருக்கு 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக்கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கர் பயிருக்கு 10 டேங்க் வரை தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல் சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். வேப்பம் புண்ணாக்கு: வேப்பம் புண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் புண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிரும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பெறும்.

Saturday 26 July 2014

கழிவுகளில் இருந்து செலவில்லாத இயற்கை உரம்

தோட்டத்தில் பயிரிட்டுள்ள செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு விலை உயர்ந்த ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையான வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துவது மண் வளர்த்திற்கும் செடிகளுக்கும் ஆரோக்கியமானது என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள்.

இயற்கை உர தயாரிப்பு நாம் அன்றாட‌ம் ச‌மைய‌லுக்கு பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள், போன்றவையே சிறந்த உரமாக உபயோகிக்கலாம். வெங்காய‌த் தோல், உருளைக்கிழ‌ங்கு தோல், உபயோகப்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காம‌ல் வீட்டில் கொல்லைபுற‌த்தில் ஒரு குழி தோண்டி அதை அதில் கொட்டி கொஞ்ச‌ம் ம‌ண்ணை தூவி விடுங்க‌ள் உரக்குழி தயாராகிவிடும்.

இதேபோல் உபயோகப்படுத்தப்பட்ட டீதூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது. மாடி வீட்டில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் ஒரு உடைந்த‌ ம‌ண் ச‌ட்டி அல்ல‌து ப‌க்கெட்டை வைத்து அதில் ம‌ண்ணை போட்டி இந்த‌ இய‌ற்கை உர‌த்தை த‌யாரிக்க‌லாம். இந்த‌ க‌ழிவு ந‌ல்ல‌ வெயில் ப‌டும் ப‌டியாக‌வும் இருக்க‌ வேண்டும்.இப்ப‌டி செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள ச‌த்து எல்லாம் ஒன்றாகி ம‌க்கி உர‌மாகும்.இதை தோட்ட‌த்து காய்க‌றி செடிக‌ளுக்கு உர‌மிட்டால் செடி ந‌ன்றாக‌ வ‌ள‌ரும்.

இதனால் சுவையான‌ காய்க‌றிக‌ளும் கிடைக்கும். மட்கும் இலைகள் பெரிய பூங்கா மற்றும் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலை, தழைகளை சேகரம் செய்து எடுத்து வந்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்து வைக்க வேண்டும். கழிவுகளை மட்கவைக்கும் முன்பாக அவற்றை சிறு சிறு துகள்களாக்க வேண்டும். இந்த கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மட்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.

எனவே கரிமச்சத்து மற்றும் தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை மற்றும் காய்ந்த கழிவுகளை சேர்த்து கலக்க வேண்டும். சமையல் அறை காய்கறி கழிவுகள். பழுப்பு கழிவுகள்- வைக்கோல், காய்ந்த இலைகள் மற்றும் காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மட்க வைக்க முடியும்.

ஆக்ஸிஜன் அவசியம் 'கம்போஸ்ட் குழிகளில்' ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் தான் நுண்ணுயிர்க்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டில் இருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த குழியில் இருக்கும் கழிவுகளை கிளறி விடுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், இந்த கழிவை மக்க வைக்க உருவாகி இருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.

ஈரப்பதம் தேவை எந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறையும் பட்சத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மட்கும் தன்மை வெகுவாக பாதிக்கப்படும். மட்கிய உரம் முதிர்வடைதல் மேல் கண்டவாறு 30 நாட்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் இந்த கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மட்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும்.

முதிர்வடைந்த மக்கிய உரத்தினை கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மட்கிய உரத்தினை,நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாட்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.


இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது செறிவூட்டப்பட்ட உரமாகும். இந்த உரமானது சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும். வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில் கூட இது போன்ற இலைக்கழிவுகளை போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது மட்க வைக்கும் பயிர்க்குழி போல் பயன்படும்.

வாழை தரும் உபதொழில்கள்



வாழை விவசாயத்தில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் எக்டேரில் ஒரு கோடியே 70 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் எக் டேரில் வாழை விவசாயம் நடக்கிறது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில்தான் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது. அதனால்தான் நாடு முழுவதுக்குமான வாழை ஆராய்ச்சி நிலையத்தை திருச்சி பெற்றுள்ளது.


இவ்வளவு இருந்தும் வாழை விவசாயிகள் உபபொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர். இந்தக்குறையை தவிர்க்க வாழை ஆராய்ச்சி மையத்தில் 20 விதமான வாழை உபபொருட்களை தயாரிக்கலாம் என கண்டறிந்து அறிவித்துள்ளனர்.


மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்துகூட வாழை உபபொருள் தயாரிப்பு குறித்து கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். ஜப்பானில் நார்ச்சத்துள்ள வாழை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வாழை நாரில் இருந்து ஆடை தயாரித்து பயன்படுத்துகின்றனர்.


ஜப்பான் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு நார்ச்சத்துடன் கூடிய வாழை ரகத்தை இங்கு பயிரிடுவது, வாழை நார் ஆடை தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதிலும் திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம் இங்கு ஈடுபட்டுள்ளது.

உயர்ரக கலப்பின புதிய வாழையை உருவாக்குவதில் வாழை ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது. இரண்டொரு மாதங்களில் இந்த உயர்ரக நார்ச்சத்துடன் கூடிய வாழை அறிமுகம் செய்யப்படும். வாழையில் இருந்து விதவிதமான உணவுப்பொருட்களுடன் பாய், காகிதம் போன்ற பிற பொருட்களையும் தயாரிக்கலாம்.

இப்படி வாழையில் இருந்துபிற பொருட்களை தயாரிக்க நமது விவசாயிகளும் தொழில் முனைவோர்களும் முன்வரவேண்டும். நபார்டு நிறுவனம் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உரிய பயிற்சியையும் வழங்குகிறது.

தேவைப்பட்டால் கடனுதவியையும் பெற்றுத்தருகிறது. இதற்காக 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மூன்று திட்டத்தை நபார்டு நிறு வனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க், திருவாங்கூர் பாங்க், மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய 5 வங்கிகள் கடனுதவி தருவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விபரங்களுக்கு:

தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்,

இந்திய அரசு, தோகைமலை ரோடு,

தாயனூர் அஞ்சல், திருச்சி.

போன்: 261 8104, 261 8106.

மற்றும்

நபார்டு வங்கி,

நெ.15, முதல் மாடி,

சாஸ்திரி ரோடு,

தென்னூர், திருச்சி-17.

தீவனப் பயிர் விதைகள் - விலை மற்றும் கிடைக்கும் இடம்

வேலி மசால் - ரூ . 500 / கிலோ

முயல் மசால் - ரூ. 350 / கிலோ

தட்டைப் பயறு - ரூ. 150 / கிலோ

சூபாபுல் - ரூ. 300 / கிலோ

அகத்தி - ரூ. 500 / கிலோ

Co FS 29 -  ரூ. 400 /கிலோ

கினியாப் புல் - ரூ. 1 / கிழங்கு

கோ 4 - ரூ. 0.50 / கரணை


கிடைக்கும் இடம்

வேளாண் அறிவியல் மையம்

நாமக்கல் - 637 002.

தொலைபேசி  04286 - 266 345

DD எடுத்து அனுப்பினால் கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைக்கிறார்கள்.

பழங்குடியினருக்கு விவசாயம் செய்ய உதவும் தாட்கோ

தாட்கோ மூலம் ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு மட்டுமின்றி பழங்குடியினருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவை குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.
விவசாயம் சார்ந்த தொழில் மேற்கொள்ள பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறதா?
பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டம் உள்ளது. இதில் வேறு சமூகத்தினர் ஊடுருவி விடக்கூடாது என்பதில் அரசு மிக கவனமாக உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வது உட்பட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே பழங்குடியினரை இந்த திட்டத்தில் பயனாளி ஆக்குவர். திட்டத்தில் விண்ணப்பிப்பவர் பழங்குடியினர்தான் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பது மிக அவசியம்.
இதற்கான நிபந்தனைகள் என்னென்ன?
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும். அதற்கான அத்தாட்சிகளையும் இணைக்க வேண்டும். தாட்கோ திட்டங்களின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்ககூடாது.
பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டத்தில் மானியம் உள்ளதா?
ஆம். நில மேம்பாட்டு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது 3.75 லட்சம் ரூபாய். இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.
பயனாளிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? பழங்குடியினருக்குதான் திட்டங்கள் சென்று சேர்கின்றன என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
பழங்குடியினர் தங்களது விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களின் இடங்களிலேயே தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திட்டத்தின் அடிப்படை நோக்கம். பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டத்தில் பயனாளிகளை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழு உள்ளது. அந்தக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார்.
வேளாண்மை இணை இயக்குநர் , தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர், மாவட்ட முதன்மை வங்கி அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சேவைப் பகுதி வங்கியாளர் ஆகியோர் உறுப்பினராக இருப்பர். மாவட்ட தாட்கோ மேலாளர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இக்குழுவினரே பழங்குடியினர் நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்வர். பல துறைகளின் பிரதிநிதிகள் வெகு கவனமாக பரிசீலிப்பதால் இதில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. திட்டத்தின் முழுப் பலன்களும் பழங்குடியினரை சென்று சேரும்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் இலவசமாக பெறுவது எப்படி?

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

தமிழகத்தில் இயற்கை விவசாயம் செய்யும்,விவசாயிகளின் தொடர்பு விபரங்கள்

1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88

2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்

3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794

4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700

5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி
-606207, Dt-விழுப்புரம்

6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107

7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி

8).எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி

9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034

10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)

11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317

12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282

13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்ப் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950

14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்

15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540

16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098

17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு

18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018

19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722

20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059

21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522

22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598

23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119

24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380

25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195

26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012

27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை

28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820

29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107

30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243

31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105

32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921

33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105

34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்

35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202


36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111

37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275

38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்

39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246

40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை

41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596

42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்

43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203

44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411

44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்

45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்

46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்

47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் குளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்

48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095

49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்

50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767

51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007

52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்

53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,

54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825

55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்

56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை

57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்

58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்

59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642

60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்

61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1

62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001

63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்

64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375

65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்


66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு.