Friday 7 November 2014

தரமான சிவப்பு நிறம் உள்ள வற்றலைப் பெற்றிட விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள்

மிளகாய் வற்றலின் கூடுதல் விலை வற்றலின் சிவப்பு நிறத்தன்மை மற்றும் காரத்தன்மையைப் பொறுத்தே அமைகிறது. வற்றல் ""சிறப்புத்தரம்'' ""நடுத்தரம்'' மற்றும் ""பொதுத்தரம்'' என மூன்று தரங்களாகப் பிரிக்கப்படுகிறது.
தரமான சிவப்பு நிறம் உள்ள வற்றலைப் பெற்றிட விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள் பின்வருமாறு. மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாணக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். காய்கள், ஹீலி யாத்திஸ் மற்றும் புருடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங் கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும். சிபாரிசுப்படி பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நல்ல நிறமும் காரத்தன்மையும் அதிகரிக்கிறது. மிளகாய்ச் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களைக் காம்புடன் பறிக்க வேண்டும். பழங்களைப் பறித்த அன்றே காயப்போட வேண்டும். மணல் பரப்பிய களங்களில் பழங்களைப் பரப்பி உலரவிட வேண்டும். மிளகாய் பழங்களை மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காயப்போட வேண்டும். நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலிலிருந்து காய்ப்புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.
அறையின் ஈரம் மிளகாய்ப் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதாப் போட்டு மூடி வைக்கலாம். மிளகாய் வற்றல் சிவப்பு நிறமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். தவறான சேமிப்பு முறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் இவற்றை நல்ல விலைக்கு விற்க முடியாது. மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சாக்கில் அமுக்காமல் அள்ளி வைத்து வற்றல் உடைந்து விடாமல் கொண்டு செல்ல வேண்டும்.
- முனைவர்கள்
கி.இராமகிருஷ்ணன், வி.கு.பால்பாண்டி,
இரா.கார்த்திக்
மண்டல ஆராய்ச்சி நிலையம்,
கோவிலாங்குளம்,
அருப்புக்கோட்டை.

Friday 10 October 2014

கறவை மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் முறைகள்

கறவை மாடுகளுக்கு நார்ச்சத்து குறைந்தும், செரிமான சத்துக்கள் அதிகமாகவும் உள்ள தானியங்கள் (மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, உடைந்த கோதுமை, குருணை அரிசி) புண்ணாக்கு வகைகள் (கடலை புண்ணாக்கு, எள்ளுப்புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு) தவிடு வகைகள் (அரிசி தவிடு, கோதுமை தவிடு) பருப்பு நொய் (உளுந்தம் பருப்பு, பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை) வெல்லப்பாகு, உப்பு, தாதுக்கலவை (சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, செலினியம், பாஸ்பரஸ்) ஆகியவற்றை தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து தயாரிக்கப்படும் தீவனம் அடர் தீவனமாகும்.
அதிக அளவில் நார்ச்சத்து அல்லது குறைந்த அளவே சேர்க்கக்கூடிய தீவனப் பொருட்களை நார்த்தீவனம் என்று சொல்கிறோம். கறவைமாடு ஒவ்வொன்றும் 100 கிலோ உடல் எடைக்கு 2.5 கிலோ உலர் பொருள் வரை உட்கொள்ளும் 400 கிலோ எடையுள்ள மாடு 10 கிலோ உலர்பொருளை உட்கொள்ளும் கறவை மாடுகளுக்கான உலர்பொருள் தேவையில் 2:3 பாகம் நார்த்தீவனத்திலிருந்தும், 1:3 பாகம், அடர் தீவனத்திலிருந்தும் வருமாறு, தீவனப்பொருட்களின் அடிப்படையில் கணக்கிட்டு அளிக்க வேண்டும். நார்த்தீவன தேவையில் 2:3 பங்கு பசுமை வகையிலிருந்தும் 1:3 பங்கு உலர் வகையிலிருந்தும் அளிக்க வேண்டும். வைக்கோல், கம்பந்தட்டை, சோளத்தட்டை, கடலைக்கொடி முதலியன உலர்த்தீவனங்கள் ஆகும். தட்டை, வைக்கோல் போன்றவைகளில் 90 சத விகிதம் பசுந்தீவனங்களில் 20-26 சதவிகிதமும், அடர் தீவனத்தில் 90 சதவிகிதமும் உலர் பொருள் உள்ளது. பொதுவாக புண்ணாக்கு, தானியங்கள், தவிடு ஆகியவைகளில் ஈரப்பசை 10 சதவிகிதமும், பசுந்தீவனத்தில் 70-75 சதவிகிதமும் உள்ளது. பொதுவாக நமது கலப்பின பசுக்கள் சுமார் 350 - 400 கிலோ கிராம் எடை இருக்கும். சாதாரண மாட்டின் எடையில் ஒவ்வொரு 100 கிலோ கிராம் எடைக்கும் 1 கிலோ காய்ந்த புல்லும், 3 கிலோ பசும்புல்லும் கொடுக்க வேண்டும்.
1.5 கிலோ கலப்புத்தீவனம் ஒரு நாளைக்கு ஒரு கறவை மாட்டிற்கு தன் உடல் பராமரிப்பு தேவையைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும். தினசரி சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவைப் பசுக்களுக்கு உடல்நிலை பராமரிப்பிற்கு அளிக்கப்படும் 1.5 கிலோ அடர்தீவனமே போதுமானது. 2.5 லிட்டர் அளவிற்கு மேல் பால் கொடுக்கும் மாட்டிற்கு, ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலிற்கும் 1 கிலோ கலப்புத்தீவனம் என்ற விகிதத்தில் கூடுதலாகச் சேர்த்து அளிக்க வேண்டும்.
சினை மாடுகளுக்கு : கருவில் வளர்கிற கன்றின் வளர்ச்சிக்கான 7 மாத சினைமுதல் உடல் பராமரிப்புக்கும், பால் உற்பத்திக்கும் கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் உடல் எடையைப் பொறுத்து தினம் 1-1.5 கிலோ தீவனம் அதிகமாக கொடுத்தல் வேண்டும்.
பால் வற்றிய மாடுகளுக்கு : தினசரி 1.5 கிலோ கலப்புத் தீவனம் போதுமானது.
தீவனம் அளிக்கும் முறை : பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே தினசரி கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கறவை மாடுகளுக்கு முதலில் கலப்புத் தீவனத்தையும், பின் பசுந்தீவனத்தையும், அடுத்தாற் போல் வைக்கோல் அல்லது காய்ந்த புல்லையும் கொடுக்கலாம். அடர் தீவனக் கலவையை ஊறவைத்து அல்லது அளவாக தண்ணீர் சேர்த்துக் கொடுக்கலாம். தீவனத்தட்டைகளை நறுக்கி துண்டாக்கி அளிக்க வேண்டும். அளிக்கப்படும் தீவனங்களில் திடீரென்று மாற்றம் செய்வது நல்லதன்று.
தீவனப்புற்கள் : இறவையில் சாகுபடி செய்யும் தீவனப் புற்களான நேப்பியர் புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியா புல் ஆகியவை இவை அனைத்தும் மண் வகைகளிலும், தட்பவெப்பநிலைகளிலும் நன்றாக வளர்கின்றன. சதுப்பு நிலமாக இருந்தால் எருலமப்புல் அல்லது நீரடிப்புல்லை தேர்ந்தெடுக்கலாம். அதிக விளைச்சலுக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ-1, கோ-2, கோ-3 பயிரிட வேண்டும்.
THANKS    தகவல் : முனைவர்கள் சோ.சித்ரா தேவி, அரங்க மதிவாணன், மு.சபாபதி, இரா.பாலகோபால், கால்நடை மருத்துவ அறிவியல் துறை, த.வே.ப.கழகம், கோவை-641 003. போன்: 0422 - 6611 212.

Saturday 30 August 2014

தோட்டங்களுக்கு உரம்!வீட்டுக் கழிவுகளிலிருந்து !!!!!!

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்! கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.

மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும். பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.

அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும். ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.

ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.

செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும்.

இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

முட்டையிலும் முட்டைக்கோஸிலும் ஒரே சத்துக்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு, 'மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டிய இருபது வகை காய்கறிகளில் முட்டைகோஸும் ஒன்று' என 1984-ம் ஆண்டு முதல் சிபாரிசு செய்து வருகிறது.

'முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காய். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் கிடைக்காது' என்கிற கருத்து உலக அளவில் பரவியிருந்தது. ஆனால், பெரும்பாலான நாட்டில் இதை நம்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக முட்டைகோஸை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

இன்று உலகளவில் முட்டைகோஸ் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். முட்டைகோஸில் இரும்புச்சத்து வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் டி ஆகியவை அதிகமாக உள்ளதால் குடல் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என உலகளவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முட்டையில் இருக்கின்ற சத்துக்களில் பலவும் அப்படியே முட்டை கோஸுக்குள் ளும் இருக்கின்றன.மீனில் உள்ள மூளை வளர்ச்சியைத் தூண்டுகிற ஒமேகா-3 எனும் சத்து முட்டைகோஸிலும் உள்ளன. * பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது.

பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு

Saturday 23 August 2014

இயற்கை மருந்துகள் பயிரைக் காக்கும்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

 விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
 ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
 எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.
 எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.
 அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
 இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
 நெல் குலை நோய்க்கு வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 அனைத்து காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.
 அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம். கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 மிளகாய்ப் பேன், வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.

 பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம். தென்னை வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

Sunday 17 August 2014

இயற்கை மருந்துகள் பயிரைக் காக்கும்


இயற்கை மருந்துகள்பயிரைக் காக்கும் .

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

 விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
 ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
 எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.
 எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.
 அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
 இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
 நெல் குலை நோய்க்கு வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
 அனைத்து காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.
 அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம். கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
 மிளகாய்ப் பேன், வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.

 பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம். தென்னை வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்

Monday 11 August 2014

வெட்டி வேர் விவசாயம் - குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம் - விவசாய் அனுபவம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "வெட்டி வேரை' சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது.
வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம். நாட்டு வகை ஒன்றரை ஆண்டும், தரிணி ஒரு ஆண்டும் சாகுபடி காலம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது குருவாடிப் பட்டி கிராமம். பி.காம்., பட்டதாரியான பாண்டியன், 40, சி.ஏ., படித்து வருவதோடு, ஏழு ஆண்டுகளாக, வெட்டி வேர் விவசாயமும் செய்து வருகிறார். பத்து ஏக்கரில் வெட்டி வேர் சாகுபடி செய்யும் இவர், சி.எம்.சூழல் மூலிகைப் பண்ணை வைத்து வெட்டி வேரை மூலப்பொருளாக வைத்து, அழகுசாதனப் பொருட்கள், பற்பொடி, தண்ணீர் சுத்திகரிப்பு, பற்பொடி, பூஜை நறுமணப்பொருட்கள், மருத்துவத் தைலம், கோடைக்காலத்திற்கு ஜன்னல்களுக்கு வெட்டிவேர் தட்டி, கைவினைப் பொருட்கள் என்று 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளார்.

இவர் கூறுகையில்,"ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து, ரூ 25 ஆயிரம் வரை நாற்றுச் செலவாகும். தேவையான நாற்றுக்களை நாங்களே சப்ளை செய்கிறோம். முதல் சாகுபடிக்கு மட்டுமே நாற்றுக்கள் தேவை. பின்னர் அதன் தண்டுகளை நாற்றுகளாக நடலாம்.


முதல் ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.70 ஆயிரம், அடுத்த ஆண்டுகளில் ரூ.30 ஆயிரமும் வரும். ஆண்டு வருமானமாக ஏக்கருக்கு ரூ 1.5 லட்சம் கிடைக்கும்.வேராக எடுத்து விற்கலாம், அல்லது மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியும் விற்கலாம்,' என்றார். ஆலோசனை பெற 96779 85574

Saturday 9 August 2014

பல்வகை பயன்தரும் எலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி

நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளாகவும் விளங்கும் "லெமன் கிராஸ்' என்னும் எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

லெமன்கிராஸ்: புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால், எலுமிச்சைப் புல்லோ கொசுவை விரட்டும். இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருப்பதால், இந்தப் புல்லை வளர்த்தால், கொசுக்கள் வராது.

இந்தப் புல்லிலிருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர், புளோர் கிளீனர், பினாயில் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது. லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சைச் சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும் சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப் புல் கேரளத்தில்தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால் லெமன் கிராஸ் ஆயிலை "கொச்சி வாசனை எண்ணெய்' எனவும் அழைப்பர்.

லெமன் கிராஸ் ஆயில் கொடைக்கானலில் அதிகமாக விற்கப்படுகிறது. இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். கெமிக்கல் கடைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட லெமன்கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப் புல் அதிகம் பயிரிடப்படுகிறது.

ரகங்கள்: ஒடி 19, 408, ஆர்ஆர்எல் - 39, பிரகத், பிரமான, சிபிகே - 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.

மண், தட்பவெப்பநிலை: வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு: ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ ஹெக்டேர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜூன் - ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது, ஒரு ஹெக்டேருக்கு 20-25 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்த வேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தில் முதல் பாதியை நடவின்போதும் மீதி உரத்தை நடவு செய்த ஒரு மாதம் கழித்தும் இடவேண்டும். இரண்டாம் ஆண்டில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாதம் கழித்தும் தழைச்சத்து உரம் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்: நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சைப் புல்லுக்கு 7 முதல் 15 நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு: இப்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் காணப்படுவதில்லை. எனினும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டர்ன் 25 ஈசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மில்லியனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 ஈசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை: நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது அறுவடையும் செய்ய வேண்டும். அறுவடையின்போது புல், புதர்களை தரைமட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணெய் எடுக்க தண்ணீர் அல்லது ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்க வேண்டும். எண்ணெய் கிடைக்கும் அளவு 0.2 - 0.3 சதவீதம்.
மகசூல்: ஹெக்டேருக்கு 20 முதல் 30 டன் வரை புல் கிடைக்கும். எண்ணெய் ஹெக்டேருக்கு முதலாமாண்டு 25 கிலோ, இரண்டாமாண்டு 85 முதல் 100 கிலோ கிடைக்கும்.


இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றி எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து நல்ல மகசூலும் கூடுதல் வருமானமும் பெறலாம். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் அணுகலாம்.

Wednesday 6 August 2014

வருவாய் தரும் கோழி வளர்ப்பு!

கால்நடை வளர்ப்பு தொழிலில் தமிழகத்தில் பொதுவாக அனைவரின் பங்களிப்பும் இருப்பது கோழி வளர்ப்பில்தான். பசு, ஆடு, முயல் வளர்ப்பு போன்றவற்றைக் காட்டிலும் கோழி வளர்ப்பு மிக எளிது. இறைச்சிக்கான பிராய்லர் கோழி வளர்ப்பு பெரிய பண்ணைகளுடன் முடிந்துவிடுகிறது. ஆனால், நாட்டுக்கோழி வளர்ப்பு வீடுதோறும் இருந்து வருகிறது.
எனினும், நாட்டுக்கோழியையும் சிறிய பண்ணை முறையில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். தரமான நாட்டுக்கோழி முட்டைகளைத் தேர்ந்தெடுத்து, கருவிகள் மூலம் நாமே பொரிக்கச் செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின், அடை காத்த முட்டைகளைப் பொரிக்கச் செய்ய கேட்சர் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். புதிதாக தொழில் தொடங்குவோர் குறைந்த முதலீட்டில் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
கரையான்கள் கொடுக்கலாம்: முதன்முதலாக கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் தோட்டங்களில் 20 முதல் 50 கோழிக்குஞ்சுகளை 10 கூடுகளைப் பயன்படுத்தி வளர்த்துப் பார்க்கலாம். நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பராமரிப்பு மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக வேறு பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முதல் 48 நாள்களுக்கு புரோட்டின் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு தீவனத்துடன் கீரை, கரையான்களைக் கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை நீரில் கலந்துகொடுக்கலாம்.
கேரட், பெரிய வெங்காயம் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாள்களுக்கு மேல் கடைசிவரை ஏதாவது ஒரு கீரை வகையைப் பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசி அதிகரிக்கும்.
கோழிக் கூண்டுகளிலும் பண்ணைகளில் பயன்படுத்துவதைப்போல தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகாமலிருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதைத் தவிர்க்க, 20 முதல் 30 நாள்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்.
மொத்தமாக 80 முதல் 100 நாள்களில் சேவல், கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியும். இறைச்சி விற்பனையாளர்கள், ஹோட்டல்கள் போன்றவை நாட்டுக்கோழிகளை நேரடியாக வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதன் மூலம் அதிக வருவாய் பெறலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு, அதுகுறித்த கூடுதல் விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீபுரம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்று பல்கலைக்கழகட்க் பேராசிரியர்களைச் சந்தித்து விளக்கம் பெறலாம்.

Monday 4 August 2014

கால்நடைகளுக்கு ஊறுகாய் புல் தயாரிப்பு

  • பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
  • முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
  • இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
  • தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
  • ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
செய்முறை
 
 மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
  • ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
  • அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
  • குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
  • தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
  • பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
  • பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
  • ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
  • குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
  • மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
  • நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
  • இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
  • 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
  • ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.

Wednesday 30 July 2014

பூச்சி விரட்டிகள் தயாரித்தல் : வேம்பு பொருள்

வேப்ப விதைக்கரைசல்: ஒரு ஏக்கருக்கு 3-5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம்பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம்பருப்பை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை ஒரு காடாத்துணியில் மூடையாக கட்டி சுமார் 10லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இந்தக் கரைசலை வடிகட்டினால் 6-7 லிட்டர் கரைசல் கிடைக்கும்.

பயிருக்குத் தெளிக்க வேண்டும்பொழுது ஒரு டேங்கிற்கு (10 லிட்டர்) 500-100 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500-1000 மி.லி, கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக்கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டர்-10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக்கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது.

ஒரு ஏக்கர் பயிருக்கு 6 டேங்க் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானை பயன்படுத்தினால் 11 டேங்க் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.


வேப்ப இலைக்கரைசல்: ஒரு ஏக்கர் பயிருக்குத் தெளிக்க 10-12 கிலோ இலை தேவைப்படும். இந்த இலையை ஒன்றுமிரண்டுமாக இடித்து ஒரு காடாத்துணியில் மூடையாக கட்ட வேண்டும். இதை 20-24 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

அதற்குப்பிறகு இந்தக்கரைசலை வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும்பொழுது 15-17 லிட்டர் கரைசல் கிடைக்கும்.ஒரு டேங்கிற்கு (10 லிட்டர் அளவு) 500-1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500-1000 மி.லி, கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு டேங்க் கரைசலுடன் 100 மி.லி. காதி சோப்புக்கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டருக்கு 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக்கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கர் பயிருக்கு 10 டேங்க் வரை தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல் சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். வேப்பம் புண்ணாக்கு: வேப்பம் புண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் புண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிரும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பெறும்.

Saturday 26 July 2014

கழிவுகளில் இருந்து செலவில்லாத இயற்கை உரம்

தோட்டத்தில் பயிரிட்டுள்ள செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு விலை உயர்ந்த ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையான வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துவது மண் வளர்த்திற்கும் செடிகளுக்கும் ஆரோக்கியமானது என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள்.

இயற்கை உர தயாரிப்பு நாம் அன்றாட‌ம் ச‌மைய‌லுக்கு பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள், போன்றவையே சிறந்த உரமாக உபயோகிக்கலாம். வெங்காய‌த் தோல், உருளைக்கிழ‌ங்கு தோல், உபயோகப்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காம‌ல் வீட்டில் கொல்லைபுற‌த்தில் ஒரு குழி தோண்டி அதை அதில் கொட்டி கொஞ்ச‌ம் ம‌ண்ணை தூவி விடுங்க‌ள் உரக்குழி தயாராகிவிடும்.

இதேபோல் உபயோகப்படுத்தப்பட்ட டீதூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது. மாடி வீட்டில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் ஒரு உடைந்த‌ ம‌ண் ச‌ட்டி அல்ல‌து ப‌க்கெட்டை வைத்து அதில் ம‌ண்ணை போட்டி இந்த‌ இய‌ற்கை உர‌த்தை த‌யாரிக்க‌லாம். இந்த‌ க‌ழிவு ந‌ல்ல‌ வெயில் ப‌டும் ப‌டியாக‌வும் இருக்க‌ வேண்டும்.இப்ப‌டி செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள ச‌த்து எல்லாம் ஒன்றாகி ம‌க்கி உர‌மாகும்.இதை தோட்ட‌த்து காய்க‌றி செடிக‌ளுக்கு உர‌மிட்டால் செடி ந‌ன்றாக‌ வ‌ள‌ரும்.

இதனால் சுவையான‌ காய்க‌றிக‌ளும் கிடைக்கும். மட்கும் இலைகள் பெரிய பூங்கா மற்றும் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலை, தழைகளை சேகரம் செய்து எடுத்து வந்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்து வைக்க வேண்டும். கழிவுகளை மட்கவைக்கும் முன்பாக அவற்றை சிறு சிறு துகள்களாக்க வேண்டும். இந்த கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மட்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.

எனவே கரிமச்சத்து மற்றும் தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை மற்றும் காய்ந்த கழிவுகளை சேர்த்து கலக்க வேண்டும். சமையல் அறை காய்கறி கழிவுகள். பழுப்பு கழிவுகள்- வைக்கோல், காய்ந்த இலைகள் மற்றும் காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மட்க வைக்க முடியும்.

ஆக்ஸிஜன் அவசியம் 'கம்போஸ்ட் குழிகளில்' ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் தான் நுண்ணுயிர்க்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டில் இருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த குழியில் இருக்கும் கழிவுகளை கிளறி விடுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், இந்த கழிவை மக்க வைக்க உருவாகி இருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.

ஈரப்பதம் தேவை எந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறையும் பட்சத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மட்கும் தன்மை வெகுவாக பாதிக்கப்படும். மட்கிய உரம் முதிர்வடைதல் மேல் கண்டவாறு 30 நாட்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் இந்த கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மட்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும்.

முதிர்வடைந்த மக்கிய உரத்தினை கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மட்கிய உரத்தினை,நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாட்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.


இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது செறிவூட்டப்பட்ட உரமாகும். இந்த உரமானது சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும். வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில் கூட இது போன்ற இலைக்கழிவுகளை போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது மட்க வைக்கும் பயிர்க்குழி போல் பயன்படும்.

வாழை தரும் உபதொழில்கள்



வாழை விவசாயத்தில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் எக்டேரில் ஒரு கோடியே 70 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் எக் டேரில் வாழை விவசாயம் நடக்கிறது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில்தான் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது. அதனால்தான் நாடு முழுவதுக்குமான வாழை ஆராய்ச்சி நிலையத்தை திருச்சி பெற்றுள்ளது.


இவ்வளவு இருந்தும் வாழை விவசாயிகள் உபபொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர். இந்தக்குறையை தவிர்க்க வாழை ஆராய்ச்சி மையத்தில் 20 விதமான வாழை உபபொருட்களை தயாரிக்கலாம் என கண்டறிந்து அறிவித்துள்ளனர்.


மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்துகூட வாழை உபபொருள் தயாரிப்பு குறித்து கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். ஜப்பானில் நார்ச்சத்துள்ள வாழை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வாழை நாரில் இருந்து ஆடை தயாரித்து பயன்படுத்துகின்றனர்.


ஜப்பான் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு நார்ச்சத்துடன் கூடிய வாழை ரகத்தை இங்கு பயிரிடுவது, வாழை நார் ஆடை தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதிலும் திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம் இங்கு ஈடுபட்டுள்ளது.

உயர்ரக கலப்பின புதிய வாழையை உருவாக்குவதில் வாழை ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது. இரண்டொரு மாதங்களில் இந்த உயர்ரக நார்ச்சத்துடன் கூடிய வாழை அறிமுகம் செய்யப்படும். வாழையில் இருந்து விதவிதமான உணவுப்பொருட்களுடன் பாய், காகிதம் போன்ற பிற பொருட்களையும் தயாரிக்கலாம்.

இப்படி வாழையில் இருந்துபிற பொருட்களை தயாரிக்க நமது விவசாயிகளும் தொழில் முனைவோர்களும் முன்வரவேண்டும். நபார்டு நிறுவனம் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உரிய பயிற்சியையும் வழங்குகிறது.

தேவைப்பட்டால் கடனுதவியையும் பெற்றுத்தருகிறது. இதற்காக 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மூன்று திட்டத்தை நபார்டு நிறு வனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க், திருவாங்கூர் பாங்க், மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய 5 வங்கிகள் கடனுதவி தருவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விபரங்களுக்கு:

தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்,

இந்திய அரசு, தோகைமலை ரோடு,

தாயனூர் அஞ்சல், திருச்சி.

போன்: 261 8104, 261 8106.

மற்றும்

நபார்டு வங்கி,

நெ.15, முதல் மாடி,

சாஸ்திரி ரோடு,

தென்னூர், திருச்சி-17.

தீவனப் பயிர் விதைகள் - விலை மற்றும் கிடைக்கும் இடம்

வேலி மசால் - ரூ . 500 / கிலோ

முயல் மசால் - ரூ. 350 / கிலோ

தட்டைப் பயறு - ரூ. 150 / கிலோ

சூபாபுல் - ரூ. 300 / கிலோ

அகத்தி - ரூ. 500 / கிலோ

Co FS 29 -  ரூ. 400 /கிலோ

கினியாப் புல் - ரூ. 1 / கிழங்கு

கோ 4 - ரூ. 0.50 / கரணை


கிடைக்கும் இடம்

வேளாண் அறிவியல் மையம்

நாமக்கல் - 637 002.

தொலைபேசி  04286 - 266 345

DD எடுத்து அனுப்பினால் கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைக்கிறார்கள்.

பழங்குடியினருக்கு விவசாயம் செய்ய உதவும் தாட்கோ

தாட்கோ மூலம் ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு மட்டுமின்றி பழங்குடியினருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவை குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.
விவசாயம் சார்ந்த தொழில் மேற்கொள்ள பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறதா?
பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டம் உள்ளது. இதில் வேறு சமூகத்தினர் ஊடுருவி விடக்கூடாது என்பதில் அரசு மிக கவனமாக உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வது உட்பட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே பழங்குடியினரை இந்த திட்டத்தில் பயனாளி ஆக்குவர். திட்டத்தில் விண்ணப்பிப்பவர் பழங்குடியினர்தான் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பது மிக அவசியம்.
இதற்கான நிபந்தனைகள் என்னென்ன?
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும். அதற்கான அத்தாட்சிகளையும் இணைக்க வேண்டும். தாட்கோ திட்டங்களின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்ககூடாது.
பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டத்தில் மானியம் உள்ளதா?
ஆம். நில மேம்பாட்டு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது 3.75 லட்சம் ரூபாய். இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.
பயனாளிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? பழங்குடியினருக்குதான் திட்டங்கள் சென்று சேர்கின்றன என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
பழங்குடியினர் தங்களது விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களின் இடங்களிலேயே தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திட்டத்தின் அடிப்படை நோக்கம். பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டத்தில் பயனாளிகளை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழு உள்ளது. அந்தக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார்.
வேளாண்மை இணை இயக்குநர் , தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர், மாவட்ட முதன்மை வங்கி அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சேவைப் பகுதி வங்கியாளர் ஆகியோர் உறுப்பினராக இருப்பர். மாவட்ட தாட்கோ மேலாளர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இக்குழுவினரே பழங்குடியினர் நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்வர். பல துறைகளின் பிரதிநிதிகள் வெகு கவனமாக பரிசீலிப்பதால் இதில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. திட்டத்தின் முழுப் பலன்களும் பழங்குடியினரை சென்று சேரும்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் இலவசமாக பெறுவது எப்படி?

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

தமிழகத்தில் இயற்கை விவசாயம் செய்யும்,விவசாயிகளின் தொடர்பு விபரங்கள்

1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88

2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்

3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794

4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700

5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி
-606207, Dt-விழுப்புரம்

6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107

7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி

8).எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி

9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034

10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)

11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317

12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282

13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்ப் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950

14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்

15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540

16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098

17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு

18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018

19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722

20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059

21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522

22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598

23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119

24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380

25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195

26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012

27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை

28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820

29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107

30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243

31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105

32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921

33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105

34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்

35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202


36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111

37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275

38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்

39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246

40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை

41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596

42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்

43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203

44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411

44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்

45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்

46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்

47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் குளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்

48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095

49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்

50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767

51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007

52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்

53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,

54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825

55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்

56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை

57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்

58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்

59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642

60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்

61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1

62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001

63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்

64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375

65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்


66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு.